கோவை, ஆக. 28- கோவை மாநகர காவல் ஆணை யர் எழுதிய “எனக்கு இன்னொரு முகம் இருக்கு” நூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணை யர் வி.பாலகிருஷ்ணன் எழுதிய ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ என்ற நூலும், அவருடைய மனைவி ஷ்வேதா சுப்பையா பாலகிருஷ் ணன், மகன் அத்ரூத் சுப்பையா பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து எழுதிய ‘பேசினேட்டிங் பிளாக்ஸ் பார் பன்’ என்ற நூல் வெளி யீட்டு விழா கோவை ப்ரூக்ஃபாண்டு ரோடு சாலையில் உள்ள ஐஎம்ஏ ஹாலில் ஞாயிறன்று நடைபெற்றது. கோவை பாரதீய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவரா யர் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டார். முதல் நூலை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இயக்குநர் எம். கிருஷ்ணன், 2 ஆவது நூலை எஸ். எஸ்.வி.எம். கல்வி நிறுவன இயக்கு நர் ஸ்ரீஷா மோகன்தாஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் ஏற் புரையாற்றுகையில், நான் காவல் துறையில் இருந்தாலும் புத்தகம் எழுத வேண்டும் என்ற அடிப்படை ஆர்வம் ஆரம்பத்திலேயே எனக்கு இருந்ததால்தான் என்னால் புத்த கம் எழுத முடிந்தது. நேரம் என்பது அனைவருக்குமே 24 மணி தான். அதில் நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதுதான் நம் நேரத்தில் முன்நிற்கிறது. நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கி றோம் என்பதை முடிவு செய்துவிட் டால் நேரம் தானாகவே கிடைத்து விடும். புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் இருந் தால் அது கண்டிப்பாக நடக்கும். அதற்கான நேரமும் நமக்கு தானா கவே வந்து சேரும். நாம் என்ன நினைக்கிறோமோ, அதுவாக நினைத்து வாழும்போது அதுவா கவே நாம் மாறிவிடுவோம். நமக் குள் இருக்கும் கருத்துக்களை ஒவ் வொருவரும் ஒவ்வொரு விதமாக வெளியிடுவார்கள். கவிதை, பாடல், கதை, கட்டுரை என எந்த விதத்திலும் அந்த கருத் துக்களை வெளிப்படுத்தலாம். அது தான் மனிதனின் இயல்பு. நாம் எந்த வகையில் வெளிப்படுத்தினால் அது நன்றாக வருகிறதோ அந்த வகையில் கருத்துக்களை வெளி யிடலாம். அது கண்டிப்பாக படைப் பாக முடியும். எனது படைப்புக்கு உதவியாக இருந்த அனைவருக் கும் நன்றி, என்றார். இந்நிகழ்வில் திரளானோர் பங்கேற்றனர்.